Sunday 9 January 2011

தமிழகத்துக்கு வெளியேயான தமிழ்த்திரைப்படத்தயாரிப்புகள்..

   
 தமிழகத்திற்கு வெளியே தமிழ்திரைப்படத்தயாரிப்பு என்பது பெரும்பாலும் குறும்படங்களுடனேயே முடிந்து விடுகிறது. ஈழப்போராட்டம் தீவிரமடைந்த காலகட்டத்திற்குமுன்னர் இலங்கையில் நான் உங்கள் தோழன்,வாடைக்காற்று, குத்துவிளக்கு போன்ற சில திரைப்படங்களை மிகச்சிறு வயதில் பார்த்த ஞாபகம் இருந்தாலும் இப்போது பெயர்கள் மட்டுமே நினைவிலிருக்கின்றன.இணையத்தின் உதவியுடன் இப்போது தேடும்போது 1962 இல் வெளியான சமுதாயம் எனும் திரைப்படம் முதல் 2010 இல் வெளிநாடுகளில் வெளியான எல்லாளன் வரைசுமார் முப்பது திரைப்படங்கள் அங்கு தயாரிக்கப்பட்டது தெரியவருகிறது,

 போராட்டத்தின் தீவிரகாலத்தில் பல குறும்படங்கள் விடுதலப்புலிகளின் கலைபண்பாட்டுப்பிரிவினரால் தயாரிக்கப்பட்டன. வீடியோக்கருவிகளின்மூலம் மிகக்குறைந்த வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட அப்படங்கள் தாய்மண்ணின் துன்பதுயரங்களையும் போராளிகளின் தீரத்தையும் ஈகத்தையும் தமிழ்மண்ணின் விடிதலையின் தேவையையும் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தன.

         மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்ந்திருந்தும் முன்னர்  யாருமே திரைப்படதயாரிப்புக்கு முயன்றதாக தெளிவாகத்தெரியாவிட்டாலும் இப்போது அநுஸ்தானம்,காதல் வேண்டும் போன்ற திரைப்படங்கள் தயாரிப்பிலிருப்பதாகத்தெரிகின்றது.

        போரின்காரணமாக ஐரோப்பா,கனடா போன்ற மேலைத்தேய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ச்சமூகமும் தன் கலைத்தாகத்தை குறும்படங்கள்மூலமே தீர்த்துக்கொண்டது. ஒரு சில முழுநீழத்திரைப்பட முயற்சிகளும் பெரிதாக வெற்றியளிக்கவில்லை.ஆனாலும் அவர்களின் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை.இவற்றில் புலம்பெயர் தமிழர் புதியவனின் மண் குறிப்பிடத்தகுந்தது.ஆனாலும் அது இலங்கையிலேயே பெரும்பாலும் படமாக்கப்பட்டதால் இலங்கைத்தமிழ்பட பட்டியலுக்குள்ளேயே அடங்குகிறது.

.Mann


 ஒருசிலர் கோடம்பாக்கத்துக்கே சென்று திரைப்படத்தயாரிப்பில் ஈடுபட்டு மிகச்சிரமப்பட்டு உழைத்த பணத்தையும் இழந்து ஓட்டாண்டயாகினர்.ஐரோப்பாவில் திரப்படவினியோகத்தை தொழிலாகக்கொண்ட ஐங்கரன் இண்டர்னேசனல் நிறுவனம் மட்டுமே அவர்களின் வினியோகத்தொடர்புகள் காரணமாக அத்தொழிலில் வெற்றிகொள்ளமுடிந்தது.புத்தரின் பெயரால் எனும்திரைப்படம் இங்கிலாந்துவாழ்  ஈழத்தமிழர்களின்  ஒரு மலையாள நண்பரால் பெரும்பாலும் தென்னிந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.

       ஈழத்தவரான பாலுமகேந்திரா இளவயதிலேயே கோடம்பாக்கத்துக்கு குடிபெயர்ந்து தன்னுடைய தன்னிகரற்ற திறமையினால் தமிழ்த்திரையுலகில் என்றென்றுமே குறிப்பிடத்தகுந்த ஒரு மிகமுக்கிய இயக்கினராகினார்.அவரின் திரைப்படங்கள் இந்திய தேசிய  விருதுகளைக்கூட வென்றிருக்கின்றன.


     
           
        போர்நிறுத்தகாலத்தில் தமிழகத்தின் தலைசிறந்த இயக்குனர்களான மகேந்திரன்,பாரதிராஜா போன்றோர் ஈழமண்ணுக்கு வருகை தந்தனர்.அவர்களின் வருகையின்பின் மகேந்திரனின் மகன் ஜானின் இயக்கத்தில் ஈழத்தின் முதலாவது முழுநீளத்திரப்படம் ஆணிவேர் தயாரிக்கப்பட்டது.அதில் பல தென்னிந்திய கலைஞர்களின் பங்கிருந்தது. தமிழகத்தின் நந்தா,மதுமிதா,நீலிமாராணி போன்றோர் நடித்திருந்தனர்.இதில் கிடைத்த அளவற்ற அநுபவத்தின் காரணமாக முற்றுமுழுதாக ஈழமண்ணின் கலைஞர்களினால் எல்லாளன் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக இவை தொடருமுன் ஈழமண் ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டது.

       கனடாவில் தயாரிக்கப்பட்ட 1999  என்னும் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேரிட்டது.வீடியோவில் படமாக்கப்பட்டதுபோல் தோன்றினாலும்  தெளிவான திரைக்கதையுடன் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது.படக்குழுவினருக்கு என் பாராட்டுக்கள்.


 

 
        மேலே பதிவிட்டிருக்கும் பட்டியல் நான் அறிந்தவை மட்டுமே.1999 படத்தைப்பற்றி எழுதுவதற்காகவே மேலே குறிப்பிட்டவற்றை எழுத ஆரம்பித்தேன். மிகவிரைவில் 1999 இனைப்பற்றி  இன்னொரு பதிவிடுகிறேன்.
        

3 comments:

  1. நண்பரே வித்தியாசமான எழுதுகிறீர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கூறி ஊக்கமளித்தற்கு நன்றி யாதவன்.

    ReplyDelete
  3. தங்களின் எழுத்துக்கள் வித்தியாசமாக உள்ளது. 1999 பற்றி நீங்கள் எழுதப்போவதை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    நன்றி,
    தனுயன்.

    ReplyDelete