Sunday 18 July 2010

அழிந்துகொண்டிருக்கும் என் முகம்....
முகவரியில்லாத தேசத்தில் நான்
என் கனவுகள்
நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன
நான் நானாக இல்லை
என் சுயத்தின் அழிவு
எப்போது ஆரம்பமென்று
சரியாக தெரியவில்லைதான்
ஆனாலும் அது
என்
தோல்விகளில்தான் தொடங்கியது
அவளைப் பார்க்கும்வரை நான்
நானாகத்தான் இருந்தேன்
பார்த்தபின்னர்தான்
வேறாகிவிட்டேன்
அவளின் பார்வைகளில்தான்
என் பரிணாமவளர்ச்சியை
அறிந்து கொண்டேன்
ஆனால் அதுதான்
பரிதாபமாகவும் மாறிவிட்டது
நாம் அன்று
ஏதாவது பேசியிருந்தால்
நான் இன்று
பேசத்தேவையே இருந்திருக்காது
அன்றைய எம் மௌனம்தான்
இன்று என் புலம்பல்களை
அத்தியாயங்களுக்குள் அடங்காதவையாக்கிவிட்டது...

Thursday 8 July 2010

காத்திருக்கிறேன்....

மவுனத்தின் வெளிகளில்
அலைகிறது என் காதல்
உன்னிடம் கொண்டு சேர்க்க
எவருமில்லை
கொண்டுசேர்க்கப்படுவது
காதலுமில்லை
உன்னால் உணரப்படுவதற்கு
இன்னும் காலமிருப்பதால்
நான் காத்திருக்கிர்றேன்
காலத்தில் கரைகளில்....