Sunday 17 October 2010

என் காதலை என்ன சொல்வேன் கண்மணி கண்மணி
என் இதயத்தை என்ன செய்தாய் பொன்மணி பொன்மணி
ஆயிரம் கனவுகள் தந்தவள் நீயடி
நான் வரும் பாதையில் பூத்திடும் பூச்செடி
                                                                                
கடலினில் வீழும் பனித்துளி யாவும்
சிப்பியை சேர்வதில்லை
அவை முத்துக்களாவதில்லை
காதலில் வீழும் இதயங்கள் யாவும்
மணவறை சேர்வதில்லை
அவை சந்தோஃசம் காண்பதில்லை
விதி போடும் கோடு வினையானது
பலர் வாழ்வில் இங்கு விளையாடுது

பாறையில் வீழ்ந்த ஓர் விதைபோல
தனிமையில் நான் இருந்தேன்
உன் பார்வையில் நான் மலர்ந்தேன்
நீ செல்லும் பாதை வேறானபின்னே
பிரிவினில் நான் தவித்தேன்
உயிர் இருந்துமே நான் இறந்தேன்
கண்ணீரில் நெஞ்சம் நீராடுதே
சோகங்கள் நாளும் உறவானதே

Sunday 10 October 2010

தங்கம் வென்ற தமிழன்

டெல்லி காமன் வெல்த் கேமில் தங்கம் வென்ற தமிழன்.

       தொங்கிப் போயிருக்கும் தமிழரின் தலைகள் இது போன்ற சில செய்திகளை கேட்கும்போதுதான் கொஞ்சமாவது நிமிர்கிறது.
   டெல்லியில் நடக்கும் காமன் வெல்த் கேம்(பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின்போது) ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிவரும் ஜிம்னாஸ்டிக் வீரர் பிரசாந் செல்லத்துரை குழுப்போட்டியிலும் மற்றுமொரு போட்டியிலுமாக இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். ஈழத்தமிழர்களான எங்களின் தலைகளை நிமிரச் செய்து பெருமிதங்கொள்ள வைத்த அவருக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
  அதேபோல் அங்கு  தங்கம் வென்ற அனைத்து தமிழர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
                  ............                    ....................              ...................           ................
 

    தமிழருக்கு பெருமை சேர்க்கும் செய்திகளை மட்டுமே பதிவிடும் எண்ணத்தில் இங்கிருந்த இழிவு சேர்க்கும் செய்தியை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்..


              ................                    .....................                 .......................            ............................

                ........... செய்திகள் ஆதாரம்;manithan.com              ..............              ..............           ................