என் காதலை என்ன சொல்வேன் கண்மணி கண்மணி
என் இதயத்தை என்ன செய்தாய் பொன்மணி பொன்மணி
ஆயிரம் கனவுகள் தந்தவள் நீயடி
நான் வரும் பாதையில் பூத்திடும் பூச்செடி
கடலினில் வீழும் பனித்துளி யாவும்
சிப்பியை சேர்வதில்லை
அவை முத்துக்களாவதில்லை
காதலில் வீழும் இதயங்கள் யாவும்
மணவறை சேர்வதில்லை
அவை சந்தோஃசம் காண்பதில்லை
விதி போடும் கோடு வினையானது
பலர் வாழ்வில் இங்கு விளையாடுது
பாறையில் வீழ்ந்த ஓர் விதைபோல
தனிமையில் நான் இருந்தேன்
உன் பார்வையில் நான் மலர்ந்தேன்
நீ செல்லும் பாதை வேறானபின்னே
பிரிவினில் நான் தவித்தேன்
உயிர் இருந்துமே நான் இறந்தேன்
கண்ணீரில் நெஞ்சம் நீராடுதே
சோகங்கள் நாளும் உறவானதே
No comments:
Post a Comment