Sunday 26 September 2010

வெறும் மனிதனாக இருந்த என்னை
கவிஞனாக மாற்றிய
செப்படி வித்தைக்காரி
நீ
செய்வது நியாயமா...?
நான்
நிலவை நிராகரித்ததும்
தென்றலை வெறுத்ததும்
உன்னை பார்த்தபின்புதானே....
நிகழ்வுகளை மறந்து நான்
கனவுகளில் மிதந்ததும்
உன்னால்தானே....
இன்று என்னை
கவிஞனாகவே இருக்கவிட்டு
யாரோ ஒருவனை
காதலனாக மாற்றுவது
நியாயமா...?

1 comment:

  1. ரசித்தேன்..உங்கள் எழுத்துக்களை ருசித்தேன்..அருமை...

    ReplyDelete