காதலை நான் விரும்பியபோது
கவிதை பாடியிருக்கிறேன்
காதலே என்னை விரும்பியபோது
கவிதையை ரசிக்கமட்டுமே முடிகிறது
எந்தத்தென்றலாவது என்னை
தொட்டுப்பாடாதாவென்று
ஏங்கும் மூங்கிலாயிருந்தேன்
உன் உதட்டோரம் உட்காருவதாயின்
புல்லாங்குழலென்ன
அடுப்பூதுங்குழலாகவும் சம்மதமே
எழுதச்சொல்லிக்கேட்டாய்
ஏதாவது கவிதை எழுதச்சொல்லிக்கேட்டாய்
உன்னையே எழுதினால்
வாசிப்பாயா பெண்ணே!
//உன் உதட்டோரம் உட்காருவதாயின்
ReplyDeleteபுல்லாங்குழலென்ன
அடுப்பூதுங்குழலாகவும் சம்மதமே//
சில நேரங்களில் சில வரிகள் சட்டென மனதில் தைக்கும்!
ரசித்த வரிகள்!
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!
நன்றி பாலாஜிசரவனா
ReplyDeleteஎந்தத்தென்றலாவது என்னை
ReplyDeleteதொட்டுப்பாடாதாவென்று
ஏங்கும் மூங்கிலாயிருந்தேன்
உன் உதட்டோரம் உட்காருவதாயின்
புல்லாங்குழலென்ன
அடுப்பூதுங்குழலாகவும் சம்மதமே
...அழகான கவிதை வரிகள்! :-)