Sunday 8 August 2010

காதலை நான் விரும்பியபோது
கவிதை பாடியிருக்கிறேன்
காதலே என்னை விரும்பியபோது
கவிதையை ரசிக்கமட்டுமே முடிகிறது

எந்தத்தென்றலாவது என்னை
தொட்டுப்பாடாதாவென்று
ஏங்கும் மூங்கிலாயிருந்தேன்
உன் உதட்டோரம் உட்காருவதாயின்
புல்லாங்குழலென்ன
அடுப்பூதுங்குழலாகவும் சம்மதமே

எழுதச்சொல்லிக்கேட்டாய்
ஏதாவது கவிதை எழுதச்சொல்லிக்கேட்டாய்
உன்னையே எழுதினால்
வாசிப்பாயா பெண்ணே!

3 comments:

  1. //உன் உதட்டோரம் உட்காருவதாயின்
    புல்லாங்குழலென்ன
    அடுப்பூதுங்குழலாகவும் சம்மதமே//
    சில நேரங்களில் சில வரிகள் சட்டென மனதில் தைக்கும்!
    ரசித்த வரிகள்!
    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!

    ReplyDelete
  2. நன்றி பாலாஜிசரவனா

    ReplyDelete
  3. எந்தத்தென்றலாவது என்னை
    தொட்டுப்பாடாதாவென்று
    ஏங்கும் மூங்கிலாயிருந்தேன்
    உன் உதட்டோரம் உட்காருவதாயின்
    புல்லாங்குழலென்ன
    அடுப்பூதுங்குழலாகவும் சம்மதமே

    ...அழகான கவிதை வரிகள்! :-)

    ReplyDelete